Header Ads



மட்டக்களப்பில் தடுப்பூசி வழங்கல் இன்று ஆரம்பம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றையதினம் 1,000 பேருக்கு தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் இன்று (08) ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இந்த கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

பிரதேச செயலக, மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், உள்ளூராட்சிமன்ற ஊழியாகளுக்கு இன்றைய தினம் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நா.மயூரன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் ஊடாக ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுகள் மக்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்படும் என மாவட்டச் செயலாளர் இதன்போது ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்


No comments

Powered by Blogger.