மர்ஹூம் நளீம் ஹாஜியார், அவர்களை ஞாபகப்படுத்த கடமைப்பட்டுள்ளோம் - மர்ஜான் பளீல் Mp
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான சிகிச்சை மையமாக வழங்கப்பட்டிருக்கும் ஜாமியா நளீமியா கலாபீடத்தின் ஸ்தாபகர் காலம்சென்ற மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்களை ஞாபகப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
அத்துடன் அந் நிலையத்தில் சுமார் 500 கட்டில்கள் போடுவதற்கு தங்கள் கட்டிடங்களை சுகாதாரப் பிரிவுக்கு வழங்கிய யாகூத் நளீம் உட்பட அதன் நிர்வாகிகளுக்கும் கௌரவம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன் இப் பணிகளை சிறப்பாகச் செய்து கொள்வதற்கு உதவி செய்த மாவட்டத்தின் கௌரவ அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் பிரதியமைச்சர் பியல் நிசாந்த அவர்களுக்கும் களுத்துறை மாவட்டச் செயலாளர் உட்பட அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் இரவு பகல் பாராது பணிபுரிந்த சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பேருவளை மற்றும் களுத்துறை மாவட்ட மக்களின் சார்பாக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மர்ஜான் பளீல் Mp
பாராளுமன்ற உறுப்பினர்
Post a Comment