Header Ads



இலங்கையின் கொரோனா பரவல் நிலையை, இந்தியாவுடன் ஒப்பிட முடியும் - Dr சுதத் சமரவீர எச்சரிக்கை


கொவிட் பரவலில் இலங்கையின் நிலையை, இந்தியாவுடன் ஒப்பிட முடியும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் நேற்றைய தினம் 1,600க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதனை இந்தியாவின் நிலையுடன் ஒப்பிட்டு கூற முடியும் என விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த நிலை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

தற்போது அதிகமானோருக்கு தொற்றுறுதியாவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இவ்வாறு தொற்றுறுதியாகின்றவர்களில் அதிகமானோர் அண்மையில் நுவரெலியா மற்றும் கதிர்காமம் பகுதிகளுக்கு சென்றிருந்தவர்கள் என தெரியவந்துள்ளதாகவும் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.