Header Ads



ஏதேனும் உதவிகள் தேவையா..? சஜித்தின் சுக நலன்களை விசாரித்த பிரதமர்


பிரதமர் மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சுக நலன்கள் குறித்து விசாரித்துள்ளார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் பிரதமர் மஹிந்த தொலைபேசி வழியாக சஜித்தின் சுகல நலன்களை விசாரித்துள்ளார்.

ஏதேனும் உதவிகள் தேவையா எனவும் பிரதர் சஜித்திடம் விசாரித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது பாரியாளர் ஜலனி பிரேமதாச ஆகியோர் சீக்கிரம் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

தமது சுகநலன்களை விசாரித்தமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் நன்றி பாராட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.