கொரோனாவால் ஒரே குடும்பத்தில் 3 பேர் மரணம் - கோணவத்தயில் சோகம்
மாலபே - கோணவத்த பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் - மனைவியும் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு பெண்ணுமே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று, தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள், 86 - 94 மற்றும் 82 வயதுகளையுடையவர்கள் என்றும் உயிரிழந்த ஆண், முன்னாள் நகரசபை உறுப்பினர் ஒருவர் என்றும் அவரது மனைவி, ஓய்வுபெற்ற தாதி என்றும் மற்றைய பெண், அவர்களுடைய உறவினர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள், ஏப்ரல் மாதம் 22ஆம் திகதியன்று, ஐ.டீ.எச்இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இம்மாதம் 3ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான இறுதிக் கிரியைகள் நடந்து முடிந்துள்ளன என்று தெரிவித்த சுகாதாரத் துறையினர், மேற்படி உயிரிழந்த தம்பதியின் மகள், மருமகன், பேரன் ஆகியோரும் தொற்றுக்குள்ளான நிலையில், ஐ.டீ.எச்இல் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினர்.
Post a Comment