குடும்பத் தகராறு காரணமாக 112 குடும்பத் தலைவர்கள் வைத்தியசாலையில் அனுமதி - பெண்கள் 42
- TM -
அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில், வீடுகளுக்குள் இம்பெறும் குடும்பத் தகராறு காரணமாக, 150க்கும் மேற்பட்டவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், பெரும்பாலானவர்கள் ஆண்களென அறியமுடிகிறது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 112 பேர் குடும்பத் தலைவர்கள் என்றும், 42 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வீட்டு வன்முறைகளை அடுத்து, நபரொருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்றும், அவருடைய சடலம், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதெனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment