நவ்பர் மௌலவிதான் சூத்திரதாரி என, அமைச்சர் சரத்வீரசேகர தெரிவிப்பதை ஏற்க முடியாது - கிரியல்ல Mp
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி மௌலவி நவ்பர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல அமைச்சரின் இந்த அறிவிப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மௌலவி நவ்பர் அதிகாரிகள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நிறுத்தவில்லை என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக அவரது பெயர் திடீரென எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஏன் ஜஹ்ரான் ஹாசிமிற்கு சம்பளம் வழங்கப்பட்டமை குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள அவர் இந்தியாவிற்கு தப்பிச்சென்ற சாராவை ஏன் அரசாங்கம் நாடு கடத்த தவறியுள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Biggest Drama Of SriLankan Government. Truth will come out soon...
ReplyDelete