Header Ads



சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய, திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி - இராணுவ தளபதி


இலங்கையில் திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு தடையில்லை என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார பாதுகாப்பு முறையின் கீழ் திருமண நிகழ்வுகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கவுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே திருமண நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் அதனை நிறுத்த முடியாதென்பதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் நாட்டில் பரவும் கொரோனா நிலைமை தொடர்பில் கருத்திற்கொண்டு சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய திருமண நிகழ்வுகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.