விமலுக்கு ஜனாதிபதி வழங்கிய உத்தரவு - உடனடியாக நிறுத்துமாறும் அறிவுரை
- Tm-
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின தலைமை பொறுப்புக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டுமென, ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆளும் தரப்பு உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு, ஜனாதிபதி அவர்களுக்கு அறிவித்துள்ளார்.
விமல் வீரவன்சவை ஜனாதிபதி சந்தித்து பேசியபோதே, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தான் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் எனவும் எனவே, வேறு அமைப்புகளுக்கோ அல்லது பதவிகளுக்கோ தலைமை தாங்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் ஏதும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.நாடகத்தை அரங்கேற்றும் போது அங்கங்கே ஏற்படும் தோசங்களே அன்றி வேறு ஏதும் இல்லை. திட்டமிட்ட நாடகம் சரியாக அரங்கேற்றவும் அறுபத்தி ஒன்பது இலட்சம் மக்களை மாடாக்கும் திட்டடும் சரியாக அவ்வப்போது அரங்கேற்றப்படும்.
ReplyDeleteindia should annouce that srilanka is one of indian state ,
ReplyDeleteஇப்பொழுது ஜெனீவா தலைப்பு கிடைத்ததுவிட்டது அதை விடு விமல்
ReplyDelete