Header Ads



மாலை 4.15 க்கு இம்ரான் வந்திறங்குகிறார் - இந்தியாவின் வான்பரப்பினூடாக வர அனுமதி


இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று (23) மாலை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

மாலை 4.15 மணிக்கு பாகிஸ்தான் பிரதமர் இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாலை 6 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதுடன், அதன் பின்னர் இருவரும் கூட்டறிக்கை வௌியிடவுள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் நாளை (24) ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

2

இலங்கைக்கு இன்றைய தினம் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அழைத்து வரும் விமானம் இந்திய வான் பரப்பில் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த விஜயம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் இடம்பெறுகின்றது. 

இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.