Header Ads



மஜ்மா நகரில், ஜனாஸா மீட்பு


 (கல்குடா நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஜ்மா நகர் கிராமத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை (02) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மஜ்மா நகர் கிராமத்தில் வீட்டுத் தோட்டத்தை பராமரித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முஹமது கனீபா சுலைமா லெப்பை (52) என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வீட்டின் முற்றத்தில் உயிரிழந்து காணப்பட்டதனை கண்ட நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.