"பதிவு நீதிபதி" என்று அழைக்கப்படும் புதிய, நிர்வாக நிலையை உருவாக்க நீதி அமைச்சு முடிவு
நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னதாக ஒரு முன் விசாரணைக்காக "பதிவு நீதிபதி" என்று அழைக்கப்படும் புதிய நிர்வாக நிலையை உருவாக்க நீதி அமைச்சு முடிவு செய்துள்ளது.
இந்த நிலை தற்போதுள்ள நீதிமன்ற பதிவாளர் பதவிக்கு உயர்ந்ததாக இருக்கும். அத்துடன் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படும்.
“பதிவு நீதிபதி” என்ற நிலை அனைத்து நீதிமன்றங்களிலும் உருவாக்கப்படும்.
இந்த நிலையில் இந்த பதவிக்கு அதிகாரங்களை வழங்குவதற்காக நீதித்துறை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று நீதியமைச்சின் செயலாளர் பியுமந்தி பீரிஸ் தெரிவித்துள்ளார். வழக்குகளை விசாரிப்பதற்கான நிர்வாக ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பொறுப்பான இந்த பதவிக்காக நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை நியமிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதன்படி இந்த அதிகாரி ஆவணங்கள் ஊடாக சென்று வழக்குகளை விசாரணைகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வார்.
வழக்குகளின் விசாரணையின் தாமதத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இனவாதிகளின் அமைச்சரவையில் முஸ்லிம் என்றவகையில் எதுவும் சாதிக்கமுடியாமல தவி்ர்க்கும் நீங்கள், வாயைமூடி, மௌனமாகவும் மிகவும் புத்திசாதுர்யமாகவும் செயற்பட்டால் குறைந்தபட்ச வேலைகளையாவது செய்யலாம். குறிப்பாக பாராளுமன்றத்தில் முடிந்தவரை வாயைக்கட்டுபபடுத்துங்கள். அல்லாவிட்டால் நீஙகள் தானாகவே இனவாத அரசில் இருந்து வௌியேறுவது தவிர்க்கமுடியாமல் போகும்.அந்தவகையில் காலம்சென்ற ஏ.ஸீ.எஸ் ஹமீத் அவர்களின் நடத்தையை முற்றாகப் பின்பற்றினால் உங்களுக்கு அரசியலில் நின்று பிடிக்கலாம்.இது எனது பணிவான வேண்டுகோள்.
ReplyDelete