Header Ads



ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து, செயற்பட சு.க.க்கு அழைப்பு


தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

மாவனல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தேர்தலின்போதும் வேட்டையாடப்பட்டனர்.

தேர்தலின் பின்னரும் அவர்கள் வேட்டையாடப்பட்டனர். எனவே அவர்கள் எமது கட்சியுடன் இணைந்து செயற்படுவதே மரியாதையைக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியுடன் எதிர்கால தேர்தலில் இணைந்து செயற்படும் நோக்கில் அந்தக்கட்சியுடன் பேச்சு நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத்தலைவர் ருவன் விஜயவர்த்தன அண்மையில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. சஜித் அவர்களோடு இணைந்து செல்வதில் சிறிசேனா அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்க முடியாது. காலம் கனியும் போது சரிவரலாம்.

    ReplyDelete
  2. but be careful, they breath is still with mottu......friendship

    ReplyDelete

Powered by Blogger.