Header Ads



நீர்கொழும்பில் கொரோனா 31 ஆக அதிகரிப்பு


பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட  நீர்கொழும்பைச் சேர்ந்த இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.


இந்நிலையில், நீர்கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.


“குடாபாடு கனத்த வீதி மற்றும் லூவிஸ் பிளேஸ் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என  நீர்கொழும்பு பிரதான பொது சுகாதார பரிசோதகர் எச்.கே.யு.கே. குணரத்ன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.