கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று, பாடசாலைகள் ஆரம்பம்
(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று (6) கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டன.
இன்றைய தினம் தரம் 5, 11,13 ஆகிய வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் முகக் கவசங்கள் அணிந்து சுகாதார அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment