Header Ads



புதிய சீருடை தைப்பதற்காக தையல்காரரிடம் சென்ற மாணவி சீரழிக்கப்பட்டு படுகொலை


இரத்தினபுரி – பலாங்கொடயில் நபர் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது மாணவி இன்று -08- உயிரிழந்துள்ளார்.

உறவினர்களின் தகவல்படி, “குறித்த மாணவி உயர் தரம் கற்பதற்கு புதிய பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட இருந்தார். இதன்படி கடந்த 5ம் திகதி புதிய சீருடை தைப்பதற்காக தையல்காரரிடம் சென்றிருந்தார்.

எனினும், அன்று மாலை வரை மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சுயநினைவற்ற நிலையில் 24 வயதுடைய நபருக்கு சொந்தமான வீட்டில் மாணவியை பொலிஸார் மீட்டுள்ளனர்.” என்று தெரியவருகிறது.

இதனையடுத்து பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி இன்று உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

2 comments:

  1. இந்த கொலைகார,விபசார அப்பாவியை உடனே சுட்டுக் கொலை செய்து அவனுடைய குடும்பத்துக்கும் எச்சரிக்ைக செய்யும் ஒரு சட்டம் இந்த நாட்டில் நிறைவேற்றப்பட்டு உறுதியாக அமல் நடாத்தப்படாத வரை பெண் பிள்ளைகளுக்கு பாதையில் கூட தனியாகச் செல்வது பாதுகாப்பு இல்லை.

    ReplyDelete
  2. கோத்தாபய சேருடைய ஆட்சியில் மோடி சேருடைய நிழல் படியப்போகின்றதா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.