Header Ads



தங்க முகக் கவசம் அணியும் சங்கர்


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக்காரணமாக முகக் கவசம் அணிவது பல நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இந்தியாவில் புனேயைச் சேர்ந்த சங்கர் குரேட்(Shankar Kurade) என்ற பணக்காரர் ஒருவர்  தங்க நகைகள் மீது கொண்ட ஆர்வத்தால் தங்கத்தினால் செய்யப்பட்ட  முகக் கவசத்தை அணிந்து வருகின்றார்.

இலங்கை மதிப்பில் சுமார் 7 லட்சம் பெறுமதியான இம் முகக் கவசத்தில் அவர் சுவாசிப்பதற்காக சிறு சிறு துளைகள் இடப்பட்டுள்ளன.

எனினும் இம் முகக் கவசமானது கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க உதவுமா என்பது சந்தேகம்தான் என்கிறார் சங்கர்.

இந் நிலையில் குறித்த முகக்கவசத்துடனான  புகைப்படங்கள் தற்பொழுது  இணையத்தில் வைரலாகி வருகின்றன.

No comments

Powered by Blogger.