Header Ads



மஹேலவிடம் இன்று, வாக்குமூலம இல்லை

இன்றைய தினம் -03- வாக்குமூலம் வழங்க வருகைத் தர வேண்டாம் என விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவிற்கு அறிவித்துள்ளது. 

அதன்படி, அவருக்கு வேறொரு தினம் அறிவிக்கப்படவுள்ளதாக விசேட விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. 

விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவில் இன்றைய தினம் (03) முன்னிலையாகுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவிற்கு நேற்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த விசாரணைப் பிரிவு தற்போது மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதேவேளை, இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவில் ஆஜராகி நேற்றைய தினம் (02) 9 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தார். 

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் உப்புல் தரங்க மற்றும் தெரிவுக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா ஆகியோர் குறித்த பிரிவில் இதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.