மின் கட்டணங்களுக்கு 25% கழிவு - கட்டணங்களை செலுத்தவும் கால அவகாசம்
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 0 முதல் 90 மின் அலகுகள் வரையில் பாவித்த பாவனையாளர்களுக்கு 25 வீதம் கட்டண சலுகை வழங்குவதற்கு அமைச்சரவைக்கு ஆலோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கட்டணத்தை செலுத்துவதற்கு மூன்று மாத சலுகை காலம் வழங்குவதற்கும் ஆலோசனை ஒன்றை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
COVID19 காலம் தொழில் கட்டுப்பாடுள்ள காலமாகும். சுருக்கமாகச் சொல்லப்போனால் எவ்வித வருமானமும் இல்லாது மக்கள் வீடுகளிலேயே "குந்தி" இருந்து தம் காலத்தை வறுமையில் கழித்த காலம். பிள்ளைகள் அனைவரும் வீட்டில் இருந்தமையால் மின்சாரம் அதிகமாகப் பாவிக்கப்பட்ட காலமும்கூட. முறைப்படி இந்த மூன்று மாத காலத்திற்கும் 100% கழிவு கொடுத்திருக்க வேண்டும். கட்டப்பட வேண்டிய நிலுவைத் தொகைக்கு மார்கழி முடியும் வரை கால அவகாசம் வழங்கினால் ஏற்புடையதாக இருக்கும்.
ReplyDelete