Header Ads



கொரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி தோற்றுவிட்டது: எர்டோகன்


கரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி சில இடங்களில் தோற்றுவிட்டது. எனினும் அடுத்து வரும் மாதங்களில் மீண்டு வருவோம் என்று அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, 

“சமீபத்தில் வந்துள்ள கரோனா தொற்று எண்ணிக்கையைப் பார்க்கும்போது நாம் கரோனாவுக்கு எதிரான போரில் தோற்றுவிட்டோம் என்பதைக் காட்டுகிறது. ஆனால், வரும் மாதங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி கரோனாவை நமது நாட்டிலிருந்து விலக்குவோம். மக்களைப் பாதுகாத்து வருடத்தின் இரண்டாம் பகுதியில் பொருளாதாரத்தை மீட்டெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.