Header Ads



மட்டக்களப்பில் டிஜிற்றல் வரலாற்று ஆவண முறைமை

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி மரபுரிமை ஆவணங்களை டிஜிடல் நவீனதொழிநுட்ப முறையில் ஆவணப்படுத்தும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்டச் செயலக நூலகம்பௌண்டேசன் மட்டக்களப்பு கிளையின் அனுசரணையில் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.

இதன்படி மட்டக்களப்பு மாவட்ட கலாசார கூடத்தில் கொலனித்துவ ஆட்சியாளர் காலத்திலிருந்துசேகரிக்கப்பட்ட மரபுரிமை ஆவணங்களான வரலாற்றச் சாதனங்கள் ஏடுகள் பண்டைய தொன்மை ஆவணங்கள்மென் பிரதியில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இவ்விதம்ஆவணம் செய்யப்பட்ட பிரதிகள் வியாழக்கிழமை 25.06.2020  மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது மட்டக்களப்புமாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜாவிடம் கையளிக்கப்பட்டன.

நூலகம்பௌண்டேசன் நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளைப் பணிப்பாளர் சொக்கலிங்கம் பிரசாத்இதனைக் கையளித்தார்.இந்நிகழ்வில்கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் கலாமதி, எதிர்கால சந்ததியினர் எமது பண்டைய காலத்துவரலாறுகளை அறிந்து கொள்வதற்கு இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளது. இதனைசெயல்படுத்த முன்வந்த ஆர்வலர்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி செய்பவர்களுக்கும்எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.நமதுகலாசார முறைகள் ஏனைய ஆக்கங்கங்கள் டிஜிடல் கட்டமைப்பில் ஆவணப்படுத்த வேண்டியது மிகவும்அவசியமானது என்றார். இந்நிகழ்வில்மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவுக்குப் பொறுப்பான மேலதிகஅரசாங்க அதிபர்  நவரூபரஞ்சினிமுகுந்தன், மாவட்ட உதவிச் செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்ட கலாசாரஉத்தியோகத்தர் எஸ். ஜெய்னுலாப்தீன் உட்பட அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.


No comments

Powered by Blogger.