பங்களாதேஷ் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் மஷ்ரபி மொட்டர்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் டாக்காவிலுள்ள அவரது இல்லத்தில் சுயதனிமைப்படுத்தலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
இதனை அவரது இளைய சகோதரர் உறுதிப்படுத்தியுள்ளதாக இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பங்களாதேஷ் அணியினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் நபீஸ் இக்பால் மற்றும் அவரது சகோதரரும் பங்களாதேஷ் அணியின் ஒருநாள் அணித்தலைவருமான தமிம் இக்பால் ஆகியோருக்கும் இதற்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நபீஸ் இக்பால் தற்போது சிட்டகொங்கிலுள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment