Header Ads



கட்சியிலிருந்து வெளியேறிய அனைவரையும் கட்சியை சிதைப்பதை நிறுத்துமாறு நவீன் வேண்டுகோள்

வலுவான மக்கள் ஆணையை பெறும்விதத்தில் ஐக்கியதேசிய கட்சி தன்னை சீர்திருத்தியுள்ளது என கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்துள்ள நவீன் திசநாயக்க பல தரப்பினர் ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர் ஆனால் ஒவ்வொரு தடவையும் கட்சி வலுவானதாக எழுச்சி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் பிரிவுகளும் வேறு பல விடயங்களும் அவ்வப்போது காணப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அவர் யானையை சின்னமாக கொண்ட ஐக்கியதேசிய கட்சி தொடர்ந்தும் அரசியலில் தீவிரமாக செயற்படும் என தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து வெளியேறிய அனைவரையும் கட்சியை சிதைப்பதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர் ஐக்கியத்துடன் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனார்.

No comments

Powered by Blogger.