Header Ads



பாராளுமன்ற தேர்தலின் பின், மாகாண தேர்தல்களை நடத்த நடவடிக்கை - பிரதமர் உறுதி

பாராளுமன்ற தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இன்று -23-  உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாக மக்கள் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபை தேர்தல்களில் வெற்றிபெறுவது குறித்த நம்;பிக்கையின்மை காரணமாக முன்னைய அரசாங்கம் மாகாணசபைகள் தேர்தலை நடத்தவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தவுடன் கூடிய விரைவில் மாகாணசபைகள் தேர்தல் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகள் தேர்தல் நீண்ட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டமை நியாயமற்ற செயல் என தெரிவித்துள்ள பிரதமர் அவ்வாறு ஒத்திவைத்தமையை கண்டித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அபிவிருத்தி திட்டங்கள் குறைவடைந்தன எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.