தப்பியோடியுள்ள 10 பாதாள உலகத் தலைவர்கள் - கைதுசெய்ய இன்டர்போல் ஊடாக நடவடிக்கை
(எம்.எப்.எம்.பஸீர்)
நாட்டில் இடம்பெறும் பாதாள உலகக் குற்றங்களாக கருதப்படும், திட்டமிட்ட குற்றங்களை வெளிநாடுகளிலிருந்து நெறிப்படுத்துவதாக நம்பப்படும், தப்பியோடியுள்ள பாதாள உலகத் தலைவர்கள் 10 பேரைக் கைது செய்ய இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸார் ஊடாக விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன.
சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனய்வுத் திணைக்களத்தில் உள்ள சர்வதேச பொலிஸ் கிளை ஊடாக இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்து இலங்கையில் அவர்களுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டத்தின் முன்னிறுத்துவது குறித்த சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம், திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
Post a Comment