கொரோனா பாதுகாப்பு ஆடைகளை இலங்கையில், உற்பத்தி செய்வது தொடர்பில் ஆராய்வு
கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுதும் பாதுகாப்பு ஆடை உற்பத்திக்கு கேள்வி எழுந்துள்ளன. இதற்கமைய பாதுகாப்பு ஆடைகளை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்தியாவசிய சேவைகள் தொடர்பன ஜனாதிபதி செயலணி இன்று புதன்கிழமை -15- பஷில் ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் கூடியது.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நிரந்தரப் பிரதிநிதி மொறாத் மொஹதீன், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் இக்கலந்துரையாடலில் கலந்துக் கொண்டார்கள்.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துக்கு ஒரு வாரத்திற்கு ஒரு மில்லியன் கையுறைகளும்,10 மில்லியன் முக்கவசங்களும் தேவைப்படுகின்றது. இந்த உற்பத்திகளை இலங்கையின் ஆடை தொழிற்சாலை ஊடாக உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
ஆடை தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு ஆடை உற்பத்திக்கு தேவையான வசதிகளை வழங்க முதலீட்டு சபையால் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழு தினமும் கூடி தற்போதைய நிலவரம், ஆடை உற்பத்தி தொடர்பில் கவனம் செலுத்தும். மூன்று மாத காலத்திற்குள் இந்த பாதுகாப்பு ஆடைகளை உற்பத்தி செய்வதாக தீர்மானிக்கப்பட்டது.
Gread move
ReplyDelete