Header Ads



நாராஹெண்பிட்டி தாபரே மாவத்தை முடக்கம்


நாராஹெண்பிட்டி தாபரே மாவத்தையில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் நேற்று மாலை (27) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

அதன்படி குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இன்று (28) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். 

நேற்றைய தினத்தில் மாத்திரம் 60 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானோர் கடற்படை உறுப்பினர்கள் எனவும் அவர் கூறினார். 

மேலும் நாராஹெண்பிட்டி தாபரே மாவத்தையில் கொரோனா தொற்றாளர்கள் இருவரும் டொரின்டன் அறுபதாம் இலக்க தோட்டத்தில் கொழும்பு மாநகர சபை ஊழியர் ஒருவரும் நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

கொழும்பு மாநகர சபையில் பணிபுரியும் ஊழியர் பணியாற்றும் வாகனத்தின் சாரதி கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் வசிப்பவர் என கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.