Header Ads



கொரோனா பலி எண்ணிக்கையில், சீனா பொய் கூறுகிறது - அமெரிக்க அரசியல்வாதிகள் கடுமையாக சாடல்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவ துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

மொத்தம் இப்போதுவரை 38,000பேர் உயிரிழந்துள்ளதாகவும். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீனாவில் 3000க்கும் அதிகமானோர்தான் உயிரிழந்துள்ளனர் என்று வெளியான செய்தியை அமெரிக்க எம்.பிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் உளவுத்துறை தகவலையும் சுட்டிக்காட்டி சீனா உண்மையான எண்ணிக்கையை மறைக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளனர்

இதனையடுத்து அதிபர் டிரம்ப் கூறும்போது, நமக்கு எப்படி தெரியும்? அவர்கள் பலி எண்ணிக்கை தரவை குறைத்து காட்டியிருக்கலாம். மறைக்கிறார்கள், ஆனால் சீனாவுடனான நம் உறவு நல்ல முறையில்தான் உள்ளது” என்று கூறினார்.

அமெரிக்க ராணுவம்தான் கொரோனா பரவலுக்குக் காரணம் என சீனா குற்றம்சாட்ட அமெரிக்காவோ சீனாதான் கொரோனா பரவலுக்குக் காரணம் என்று எதிர்க்குற்றச்சாட்டுகளை வைத்து இதன் மூலம் பெரும் சர்ச்சை முன்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க காங்கிரஸில் உள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்க உளவுத்துறையை மேற்கோள் காட்டும் புளூம்பர்க் அறிக்கையைச் சுட்டிக்காட்டி சீனா உலக நாடுகளை தவறாக வழிநடத்தி விட்டது என்று குற்றம் சாட்டியுள்ளது..

சீனாவின் கொரோனா செய்திகள் போலியானது என்றும் ப்ளூம்பர்க் ரகசிய உளவு ஆவணம் ஒன்றை வெள்ளை மாளிகைக்கு கடந்த வாரம் அனுப்பியதில் தெரிவித்துள்ளது.

சீனா அதிகாரபூர்வமாக 82,361 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 3,316 பேர் பலியானதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கு அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனட்டர் பென் சஸ்ஸே, சீனாவின் எண்ணிக்கைகளை “குப்பைப் பிரச்சாரம்” செய்கிறது. “அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பலி சீனாவை விட அதிகம் என்பது பொய்” என்று சாடியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “சீன கம்யூனிஸ்ட் கட்சி பொய் கூறுகிறது” என்று கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இன்னொரு குடியரசுக் கட்சி உறுப்பினர் மைக்கேல் மெக்கவுல் என்பவர் உளவுத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி, “கொரோனா வைரஸக்கு எதிரான போரில் சீனா நம்பத்தகுந்த நட்புநாடு அல்ல” என்று சாடியுள்ளார்.

“மனிதனிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ் குறித்து உலகத்திற்கு சீனா பொய்யுரைத்துள்ளது. உண்மையை கூற விரும்பும் பத்திரிகைகள், மருத்துவர்கள் வாயை அடைத்து விட்டது. தற்போது உண்மையான எண்ணிக்கையை மறைத்து வருகிறது” என்று கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார் மெக்கவுல்.

No comments

Powered by Blogger.