Header Ads



புத்தளம் இளைஞர்களின், மகத்தான சேவை

புத்தளம் மாவட்டத்தில் பசியால் வாடும் கட்டாக்காலி நாய்கள் மற்றும் பறவைகளுக்கு இளைஞர்களால் உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.


புத்தளம் குருநாகல் வீதி கல்லடி அரளிய உயன கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, அவற்றுக்கு உணவுகளை வழங்கினர். 

தொடரான ஊரடங்கு சட்டத்தினால், பொது மக்களின் நடமாட்டம் இன்மையால் வீதிகளில் அலைந்து திரிகின்ற கட்டாக்காலி நாய்கள் மற்றும் காகங்கள் உண்ண உணவின்றி உள்ளன.

இவைகளுடைய பசியை தீர்த்து வைப்பதற்காகவே குறித்த இளைஞர்களினால் இந்த உணவுகள் வழங்கப்பட்டன.

இதேவேளை, யாசகம் கேட்டு சீவிக்கும் யாசகர்களுக்கும் பிரத்தியேகமாக இவர்களால் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

எம்.யூ.எம்.சனூன்

1 comment:

  1. இவர்கள் செய்வது ஒரு சிறந்த சேவை.நன்றி சகோதரர்களே.இப்படி மிருகங்களுக்கு இந்த மாதிரியான நேரத்தில் உணவளிப்பது, அதிலும் நாய்களுக்கு உணவளிப்பது கட்டாயம் செய்யவேண்டிய ஒரு முக்கிய விடயம்.காரணம் நாய்கள் உணவு இல்லாத பட்சத்தில் பொறுமை இழந்து மக்களையோ அல்லது வேறு மிருகங்களையோ தாக்குவதர்ட்க்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.எனவே உங்கள் சேவைக்கு எங்களது வாழ்த்துக்கள் நன்றி.........

    ReplyDelete

Powered by Blogger.