Header Ads



எரிபொருள் லாரியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 47 பேர் பலி - சிரியாவில் சோகம்

சிரியாவில் எரிபொருள் கொண்டுவந்த லாரியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 47 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

சிரியாவின்  அஃப்ரின் மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இன்று வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட எரிபொருள் கொண்டுவந்த லாரி ஒன்று நிறுத்தபட்டிருந்தது. 

மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை பகுதியில் வெடிகுண்டுகள் நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரி திடிரென வெடித்து சிதறியது. 

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள், பொதுமக்கள் உள்பட 47 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

சிரியாவின் அஃப்ரின் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு குர்திஷ் போராளிகள் தான் காரணம் என துருக்கி அரசு குற்றச்சாட்டியுள்ளது. 

1 comment:

Powered by Blogger.