Header Ads



ஒரே அரச குடும்பத்தில் 150 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: சுய தனிமைப்படுத்தலில் அரசரும், பட்டத்து இளவரசரும்

சவுதி அரேபிய அரச குடும்பத்து உறுப்பினர்களில் சுமார் 150 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் பின் சல்மான் ஆகிய இருவரும் மருத்துவர்களின் ஆலோசனைப் படி தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அரச குடும்பத்து உறுப்பினர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் ரியாத்தில் அமைந்துள்ள கிங் பைசல் சிறப்பு மருத்துவமனை நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,

இதனால் 500 படுக்கைகளை தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கிங் பைசல் சிறப்பு மருத்துவமனை எப்போதும் தயார் நிலையிலேயே இருப்பதாக நிர்வாகிகள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, கிங் பைசல் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சாதாரண உறுப்பினர்களை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே 84 வயதான அரசர் சல்மான் ஜெட்டா அருகாமையில் உள்ள தீவு அரண்மனைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும், இன்னொரு தீவுக்கு பட்டத்து இளவரசர் சல்மான் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுபோன்று ஐரோப்பிய நாடுகளில் சென்று வந்த எவரேனும் அரச குடும்பத்தில் கொரோனா நோயை பரப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மொத்தம் 33 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சவுதி அரேபியாவில் இதுவரை 2,932 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சிகிச்சை பலனின்றி 41 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. சவுதி அரச குடும்பத்தை பொறுத்தமட்டில் முன்வரிசை உறுப்பினர்கள் அல்லது அவரது குடும்பத்தினர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது.

SOURCE: AL JAZEERA NEWS, The New York Times

2 comments:

  1. at last, a good news to muslims & a bad news for jews. these saudi fellows created all the problems in muslim countries by creating al-quieda, islamic states, the master minds for syria conflict, toppling egypt mursi goernment, recently they planed to punish the palastiniens residing in saudi. allah know better.

    ReplyDelete
  2. யாஅல்லாஹ் சவூதி அராபியாவில் வாழ்கின்ற அனைவர்களையும் உன்னுடைய அனைத்து சோதனைகளிள் இருந்தும் நோய்களிள் இருந்தும் பாதுகாப்பாயா!யா அல்லாஹ்! அங்கு ஆட்சி செய்கின்ற அரசர்களையும் அவர் செய்கின்ற ஆட்சிகளையும் நீயே உருவாக்கினாய் ஆகையாள் அவர்களையும் நீயே பாதுகாப்பாயாக.
    யா அல்லாஹ்! நீ எதையும் வீனாக உருவாக்குபனும் இல்லை, எதையும் வீனாக படைபவனும் அல்ல!
    யா அல்லாஹ்!கொரோனா கிருமிக்கு சொந்தக்காறனே!உன்னுடைய சத்திய தூதர் வாழ்ந்த அந்த புனித பூமியையும் உன்னுடைய புனித அல் குர்ஆன் இறக்கப்பட்ட அந்த புனித பூமியையும் நீயே பாதுகாப்பாயாக.யா அல்லாஹ்!உன்னுடைய புனித மக்காவையும்,புனித மதீனாவையும் நீயே பாதுகாப்பாயாக இஸ்லாத்தின் முதல் எதிரி ஷைத்தான் இரண்டாம் எதிரி ஷீயாக்களிள் இருந்தும் சவூதியில் இருக்கின்ற ஆலிம்கள் உமாக்கள் மற்றும் எல்லா புனித இடங்களையும் நீயே பாதுகாப்பாயாக!

    ReplyDelete

Powered by Blogger.