Header Ads



வைரஸ் தொற்றுடன் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் பணியாளர்களை தொடர்புபடுத்தி பதிவுகள் - குடும்பத்தினர் புறக்கணிக்கப்படும் நிலை

கொரோனா வைரஸ் தொற்றுடன் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் பணியாளர்களை தொடர்புபடுத்தி பல சமூக ஊடகங்கள் பதிவுகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது துரதிஸ்டவசமான பதிவு என்று ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணியாளர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் பாடசாலைகள் மற்றும் விருந்தகங்களில் புறக்கணிக்கப்படும் நிலையும், சங்கடத்துக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணியாளர்கள் தமது சொந்த பாதுகாப்பையும் கருத்திற்கொள்ளாது தற்போதைய நிலையில் பணியாற்றி வருகின்றனர்.

எனவே சமூக வலைத்தள பாவனையாளர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணியாளர்கள் தொடர்பில் பதிவுகளை இடும்போது அல்லது அதனை பகிரும்போது அதன் உள்ளடக்கம் பற்றி சிந்தித்து செயற்படுமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கோரியுள்ளது.

No comments

Powered by Blogger.