Header Ads



தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி - ஹரின்

(ஆர்.விதுஷா)

அதிகரித்திருக்கும் பொருளாதார பிரச்சினையினால் நாட்டுமக்கள் மத்தியில் தோன்றியிருக்கும் அதிருப்தியை கருத்தில் கொண்டும் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பலம் பொருந்திய எதிர்த்தரப்பு கூட்டணிக்கு அஞ்சியும் பொதுத்தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதனை  அறிய கூடியதாகவிருப்பதாக  ஐக்கிய  தேசிய  கட்சியின் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

தேர்தலை காலம்  கடத்திவிட்டு இராணுவரீதியான  ஆட்சிமுறைமையை முன்னெடுத்து விட்டு பின்னராக தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளும் இடம்பெறுதவதாக  அரசாங்க  உயர் மட்ட தகவல்களின் ஊடாக அறிந்து கொள்க்கூடியதாகவிருப்பதாகவும் அவர்  மேலும் குறிப்பிட்டார். 

ஐக்கிய  மக்கள் சக்தியின்  தேர்தல் பிரசார தலைமையக அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறினார்.

No comments

Powered by Blogger.