சில அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களுக்கு மட்டும் சேவையாற்றினர் - தர்மபால
யாருமே செய்யாத வேலைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் செய்து வருவதாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் தர்மபால செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களது தேவைகளை உடனடியாக செய்ய வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு,வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உங்களது தேவைகளை கேட்டு உடனடியாக செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களுக்கு மட்டும் இந்த மாவட்டத்தில் சேவையாற்றினர். ஆனால் எமது ஜனாதிபதி இன, மத, பேதமின்றி சேவையாற்றுகின்றார்.
கடந்த காலங்களில் உங்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன செய்திருக்கின்றது. அதனால் இந்த முறை நாடாளுமன்ற தேர்தலை சரியாக பயன்படுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
True....
ReplyDeleteஇந்தக் கருத்துத் தெரிவிப்பவரின் கருத்து உண்மையா என்பதை எதிர்வரும் தேர்தலில் இந்தத் தொகுதி வாக்காளர்கள் நிரூபித்துக் காட்டினால் போதும்.
ReplyDelete