கொரோனா தொற்றுக்குள்ளான 2 இலங்கையர்களின் நிலை என்ன?
கொவிட் 19 தொற்றியுள்ளதாக தற்போது ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு இலங்கையர்களின் உடல்நலனில் பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அவர்கள் தற்போது விசேட சிகிச்சை முறைமைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என அவர் பொது மக்களை மீண்டும் கோரியுள்ளார்.
Post a Comment