Header Ads



யாழ்ப்பாணத்தின் புதிய அராசாங்க அதிபராக, கணபதிப்பிள்ளை மகேசன் நியமனம்


யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று -17- தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முன்னதாக மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.

இதேவேளை, கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.