Header Ads



சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைப்பாளர், வீதி விபத்தில் வபாத்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடாத் தொகுதி  முன்னாள் அமைப்பாளரான எஸ்.ஏ. முஹம்மது றாபீல் (வயது 45) என்பவர் விபத்தில் பலியானதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு – திருகோணமலை வீதி வாகரையில் உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்தது.

சம்பவத்தில் மோட்டாரி; சைக்கிளில் சென்று கொண்டிருந்த றாபீல் ஸ்தலத்தில் கொல்லப்பட அந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற மற்றொருவர் படுகாயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நடந்தவுடன் ஸ்தலத்திற்கு விரைந்த வாகரைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.