Header Ads



சீனாவில் இருந்து வந்த 33 மாணவர்களும் தியத்தலாவை முகாமில் 2 வாரம் தடுத்து வைக்கப்படுவர்

சீனாவின் வுஹானில் இருந்து இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களும் தியத்தலாவை இராணுவ முகாமை சற்றுமுன்னர் சென்றடைந்துள்ளனர். 

இன்று (01) காலை ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் குறித்த மாணவர்கள் சீனாவின் வுஹான் நகரில் இருந்து மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

பின்னர், மத்தல விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் சிறப்பு பஸ் மூலம் தியத்தலாவை இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள 32 அறைகளுடன் கூடிய வைத்திய முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். 

அங்கு இவர்கள் இரண்டு வாரக்காலம் தடுத்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் குறித்த மருத்துவ முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.