முன்னாள் Mp சரணவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, இந்த தண்டனையை இன்று (07) பிறப்பித்துள்ளார்.
மோசடியான முறையில் நிதி பரிவர்தனைகளின் ஊடாக அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சரண குணவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது, 2007ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதி முதல் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்த நாட்டு மக்கள் அனைவரும் தலைகுணிந்து மரியாதை செய்கின்றனர். இந்த ஆசாமியை மூன்று வருடம் முடிய இன்னும் ஒரு நூறு வருடம் போட்டால் திரும்பி வந்து களவாடும் வேலையையாவது தவிர்க்கலாம்.
ReplyDelete