இலங்கையிலிருந்து சீனாவக்குச்சென்ற விசேட விமானம்
சீனாவின் வுஹான் நகரில் உள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வர விமானம் ஒன்றை அனுப்பியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
UL 1422 விமானம் வுஹான் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
குறித்த விமானத்தில் விசேட பயிற்சி பெற்ற சுகாதாரக் குழுவொன்றும் செல்வதாக அவர் கூறினார்.
வுஹான் நகரில் இலங்கை மாணவர்கள் 33 பேர் உள்ள நிலையில், அவர்கள் அழைத்துவரப்பட்டதும் அவர்களை விசேட பஸ் ஒன்றின் மூலம் தியத்தலாவைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை தியத்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள வைத்திய பாதுகாப்பு பிரிவில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.
Post a Comment