Header Ads



ரஞ்சன் மீது, ஐதேக ஒழுக்காற்று விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒழுக்கக் கோவையை மீறியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய அலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து அறிக்கை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2 comments:

  1. உரியவயதில் திருமணம் செய்து ஒழுங்கான குடும்ப வாழ்க்கை நடாத்தாது ஒழுக்கக் கேடான சட்டவிரோதமான அத்தனை செயற்பாடுகளையும் பொழுது போக்காக செய்து வந்த இந்த ரஞ்சனுக்கு இதுவும் வேண்டும்,இன்னமும் வேண்டும்.

    ReplyDelete
  2. இந்த சைக்கோ அரசியலுக்கும் பொது வாழ்விற்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாதவன். இவனை சிறையில் அடைப்பதே சரி

    ReplyDelete

Powered by Blogger.