Header Ads



கொரோனா வைரஸ் தொடர்பில், ஜனாதிபதியின் உத்தரவு

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸால் சீனாவில் தற்போதுவரை 200 பேரிற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இலங்கை இந்தியா உட்பட 17 நாடுகளை இந்த வைரஸ் தொற்றிக்கொண்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கொரோனா வைரஸ் தொடர்பில் மேற்கு மற்றும் சுதேச வைத்திய அதிகாரிகளிடம் அறிவுரை பெறுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.