பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியடையும்
தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் அரசிலமைப்பு திருத்தங்களில் காணப்படும் பிரச்சினைகளை சரி செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுர பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் எமது பலத்தை விமர்சிக்க வாய்ப்பில்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவது எமது பொறுப்பு. அது எமக்கு முடிந்தமையால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்றோம். ஐக்கிய தேசிய கட்சி பொதுத் தேர்தலில் படுதோல்வியடையும் என்றார்.
Post a Comment