Header Ads



போலி மாணிக்ககற்களை விற்க முயன்ற 6 பேர் கைது - கல்முனை வைத்தியசாலை அருகே சம்பவம்

- பாறுக் ஷிஹான் -

பல இலட்சம் பெறுமதியானது என ஏமாற்றி  போலி மாணிக்ககற்களை வெளிநாட்டவர்களுக்கு  விற்பனை செய்ய முயன்றதாக  சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு சந்தேகபேர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகே  வியாழக்கிழமை(2) இரவு 10 மணியளவில்   இவர்கள் கைதாகினர்.

கல்முனையில் நிலைகொண்டுள்ள கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகல்களை அடுத்து பொலிஸாரின்  உதவியுடன் குறித்த சந்தேக நபர்கள் கைதாகினர்.

இவ்வாறு கைதான நபர்களிடம் இருந்து அவர்கள் பயணம் செய்ததாக நம்பப்படும் நிசான் ராக  வேன்,6கைத்தொலைபேசிகள்,பல வர்ணங்களை உடைய போலி மாணிக்க கற்கள்,  என்பன மீட்கப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு சந்தேக நபர்கள்  அழைத்து  செல்லப்பட்டனர்.

இச்சந்தேக நபர்கள் பயணம் செய்த வேன் வாடகை அடிப்படையில் பெறப்பட்டது எனவும் கைதானவர்கள்  சுமார் 24 முதல் 43 வயது உடையவர்கள் எனவும் அம்பாறை மற்றும்   பசறை பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

கைதான 6 சந்தேக நபர்களும் சான்று பொருட்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.