ரணிலிடமிருந்து "நோமினேசன்" பெறுவதில்லை என, ஐதேக Mp க்கள் சிலர் தீர்மானம்
- Anzir -
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்க நீடித்தால், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவரின் கைகளினால் வேட்புமனு எனப்படும், நோமினேசன் பத்திரத்தில் கையெழுத்து போடுவதில்லை என, ஒருதொகை ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அறிய வருகிறது.
ஐதேக சஜித் பிரேமதாச ஆதரவு அணியின், முக்கிய புள்ளி ஒருவர் இத்தகவலை Jaffna Muslim இணையத்திடம் குறிப்பிட்டார்.
தனிக்கட்சி ஆரம்பிக்கும் அல்லது பிரிந்து போகும் எத்தகைய திட்டங்களும், சஜித்திடம் இல்லாத போதும், அவரை சுற்றியுள்ளவர்கள் அவ்வாறான அழுத்தத்தை பிரயோகிப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட ரணில் எத்தகைய பங்களிப்பையும் செய்யத் தேவையில்லை, அவர் கட்சி செயற்பாட்டிலிருந்து ஒதுங்கினால் போதும் என்ற நிலைப்பாடே நிலவுவதாகவும், பல சிறுபான்மை கட்சித் தலைவர்களும் ரணிலிடமிருந்து நோமினேசன் பெறுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பாதாகவும், அந்த புள்ளி மேலும் உறுதிப்பட தெரிவித்தார்.
Post a Comment