ஐதேக க்கென எதிர்காலமொன்று உண்டு, அனைவரும் அந்த எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை வையுங்கள்
2020 ஏப்ரல் மாத இறுதியில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறியமுடிகிறது. எனவே நாம் கட்சியின் மீள் ஒருங்கிணைப்புப் பணிகளை ஜனவரி மாத முற்பகுதியில் ஆரம்பித்து, பெப்ரவரி மாத இறுதியில் நிறைவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கென எதிர்காலமொன்று உண்டு. அனைவரும் அந்த எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை வையுங்கள். அதனை நோக்கிய பயணத்திற்கு முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதே எனது பொறுப்பாகும்.
ரணில் விக்கிரமசிங்க இன்று கட்சித்தலைமையகமான சிறிகொத்தாவில் தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அதுபற்றி ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Post a Comment