Header Ads



எம்பிலிப்பிட்டிய விபத்தில் 3 பேர் மரணம்

எம்பிலிப்பிட்டிய, சங்கபால பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

இன்று காலை 5.00 மணியளவில் பஸ் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சிறிய ரக லொறியில் பயணித்த மூன்று பேரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உடவளவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.