Header Ads



கோட்டபாயவுக்கு யாழ், கிளிநொச்சி சிவில் சமூகம் வாழ்த்து

அல்லாஹ்வின் நாட்டப்படி இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாக வந்துள்ள கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்ளை புத்தளம் வாழ் இடம்பெயர்க்கப்பட்ட யாழ் கிளிநொச்சி சிவில் சமூகம் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம். 

தாங்கள் நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் ஜனநாயக பண்புகளைப்பேணி இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை ஏற்படுத்தி அவர்வர்களது கலாசார மரபுகளை மதிக்கவும் பேணி நடக்கவும் தாய்த்திருநாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் பலதுறைகளில் முன்னேற்றவும்  சிறப்பாக நாட்டை கட்டியெழுப்பக்கூடிய சிறந்த நல்லாட்சியை ஏற்படுத்தி நாம் யாவரும் இலங்கையர்கள் என்று ஒற்றுமையுடன் ஒருதாய் மக்களாக வாழ்வதற்காக வகைசெய்து இடம்பெயர்க்கப்பட்டு வாழ்ந்து வரும் எம்மவர்களுக்கான  அனைத்து விடயங்களிலும் கவனம்செலுத்தி எங்களது காத்திரமான மீள்குடியேற்றகட்டமப்புக்களை பணிகளை முறையாக பூரணமாக நிறைவேற்றியும் எங்களது துயர்களைப்போக்க மாற்று வழியமைத்து உதவியும் முன்னுதாரணமான ஒரு சிறந்த மனிதப்பண்புள்ள நாடாகமாற்றியகை்க செய்வீர்கள் எனமனமார வாழ்த்துகின்றோம்.  இன்ஷா அல்லாஹ் 

புத்தள வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சமூக சம்மேளனம். 

தலைவர் அப்துல் மலிக் 

செயலாளர் ஹஸன் பைறூஸ்

No comments

Powered by Blogger.