Header Ads



முஸம்மிலுடைய வெளிநாட்டு, பயணத்தடை நீக்கப்பட்டது

(எம்.எப்.எம்.பஸீர்)

விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் எப்.சி.ஐ.டி. எனப்­படும்  நிதிக் குற்றப் புல­னாய்வு பிரிவின் அதி­கா­ரி­களின் கோரிக்­கைக்கு அமைய  இரு வேறு குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் சந்­தேக நபர்­க­ளுக்கு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த வெளி­நாட்டுப் பய­ணத்­த­டைகள்  அதே விசா­ரணை அதி­கா­ரி­களின் ஆத­ர­வுடன் நேற்று தளர்த்­தப்­பட்­டன.

கோட்டை நீதிவான் நீதி­மன்றில் குறித்த விவ­கா­ரங்கள் விசா­ர­ணைக்கு வந்­த­போது  அந்த பய­ணத்­த­டை­களை நீக்­கு­வ­தற்கு தாம் எதிர்ப்­பில்லை என எப்.சி.ஐ.டி. அதி­கா­ரிகள் மன்றில் தெரி­வித்­ததை அடுத்து நீதிவான் ரங்க திஸா­நா­யக்க விடுக்­கப்­பட்­டி­ருந்த வெளி­நாட்டு பயணத் தடை­களை தளர்த்­தினார்.

அதன்­படி தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஊடகப் பேச்­சாளர்  மொஹமட் முஸம்மில், அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  ஜயந்த சம­ர­வீர ஆகி­யோரின் வெளி­நாட்டுப் பய­ணத்­தடை முழு­மை­யா­கவும் மற்றும் பிறி­தொரு விவ­கா­ரத்தில் வெளி­நாட்டுப் பய­ணத்­தடை வழங்­கப்­பட்ட முன்னாள் சுங்க பணிப்­பாளர் நாயகம் ஜகத் பீ. விஜே­வீர, சுங்க பணிப்­பாளர் தாரக சென­வி­ரத்ன ஆகி­யோரின் வெளி­நாட்டு பயணத் தடைகள் என்­பன தற்­கா­லி­க­மாக தளர்த்­தப்­பட்­டன.

ஜனா­தி­பதி செய­ல­கத்தின் வாக­னங்­களை தவ­றாகப் பயன்­ப­டுத்­தி­யமை, நம்­பிக்கை துரோகம் செய்­தமை, மோசடி செய்­தமை மற்றும் மோச­டிக்கு உடந்­தை­யாக இருந்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்டம் மற்றும் கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழ் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பி­னர்கள் சில­ருக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணைகள் குறித்த வழக்கு நேற்று  கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்க முன்­னி­லையில்  விசா­ர­ணைக்கு வந்­தன.

 இதன்­போது இந்த விவ­கா­ரத்தில் கைதாகி பிணை­யி­லுள்ள தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஊடகப் பேச்­சாளர் மொஹமட் முஸம்மில்,  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயந்த சம­ர­வீர, சரத் வீர­வங்ச,  ஹேமந்த பெரேரா சேனா­ரத்ன டி சில்வா ஆகிய சந்­தேக நபர்கள் மன்றில் ஆஜ­ரா­கினர்.

No comments

Powered by Blogger.