Header Ads



பெற்ற தாய்க்கு எதிராக, செயற்பட்ட சந்திரிக்கா - மகள் என்று பாராது கட்சியிலிருந்து நீக்கிய சிறீமா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பெற்ற தாய்க்கே எதிராக செயற்பட்டவர் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்றைய தினம் -06- நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைவராக சந்திரிக்காவின் தாய் சிறிமாவோ பண்டாரநாயக்க கடமையாற்றிய காலத்தில், சந்திரிக்கா அவரது கணவரான விஜய குமாரதுங்க மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரட்னசிறி விக்ரமநாயக்க கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் டீ.பி. இலங்கக்கோன் ஆகியோருடன் வெளியேறி புதிய கட்சியொன்றை நிறுவினார் என எஸ்.பி. திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மகள் என்று பாராது சிறிமாவோ, சந்திரிக்காவை கட்சியிலிருந்து நீக்கியிருந்தார் என அ வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. SPD is the worst fellow of this country, recently Wimal & SPD fought each other, earlier lost his civil right and went to the Jail..for Insulting Chandrika..no body will hear his talks.

    ReplyDelete
  2. நாட்டு மக்களின் நலனுக்காக வெளிநாட்டு அரசாங்கம் சந்திரிகா அம்மையார் காலத்தில் நன்கொடையாக வழங்கிய 300கோடி ரூபாவை தந்திரமாக க்களவாடி அதன் மூலம்ஹேவாஹெட்டையில் சொந்த மாளிகையைக்கட்டிக்கொண்ட இந்த நஜீஸ் வாளிதான் எஸ்.பி. என்பவன்.

    ReplyDelete
  3. truth won, when you go along the road if a dog barks at you, what would you do?

    ReplyDelete

Powered by Blogger.